Jan 8, 2025 - 01:58 PM -
0
சமூகங்கள் மாறி வருவதால், அவற்றை வடிவமைக்கும் பிரச்சினைகளும் மாறுகின்றன. காலங்கள் மாறுகின்றன. அதன் மூலம் சமூகக் கோட்பாடுகளின் தன்மையும் மாறுகிறது. ஆனால் மாறாமல் இருக்கும் ஒன்று, இந்த பிரச்சினைகளைப் பற்றி பேசும் குரல்களின் தேவை – பழமையான கருத்துக்களை சவாலுக்கு உட்படுத்தும், தீங்கிழைக்கும் களங்கங்களை உடைக்கும் மற்றும் அர்த்தமுள்ள உரையாடல்களை ஊக்குவிக்கும் குரல்கள். மன நல பிரச்சினைகள், பாலின பாத்திரங்கள், நிற பாகுபாடு ஆகியவை தொடர்ந்து கனமான தாக்கத்தை ஏற்படுத்தும் உலகில், இவ்வகையான குரல்கள் மிகவும் முக்கியமானவை. எனினும், எங்கும் கருத்துக்களின் சுழல்காற்று வீசிக்கொண்டிருக்கும் நிலையில், சத்தத்தைக் கடந்து செல்லும் பார்வைகளுக்கான தேவை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அறிவார்ந்த, நம்பகமான, மற்றும் எளிமையான உணர்ச்சிகளை உள்ளடக்கிய குரல்களுக்கான தேவை.
நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியங்களில் கலாச்சார எதிர்பார்ப்புகள் வேரூன்றியிருப்பதாக உணரப்படும் இலங்கையில், இந்த தேவை மேலும் தெளிவாகத் தெரிகிறது. பெண்கள் மற்றும் ஆண்களுக்கான எதிர்பார்ப்புகள், மன நலம் குறித்த களங்கங்கள், தோற்றத்தின் அடிப்படையில் நுட்பமான ஆனால் சேதம் விளைவிக்கும் தீர்ப்புகள் ஆகியவை கவனம் தேவைப்படும் பல பிரச்சினைகளில் சில. அதிகாரமளித்தல் என்ற சொல் உண்மையில் உடல்பொருள் ஆவதை விட அதிகமாக பயன்படுத்தப்படும் உலகில், நேர்மையான, அனுதாப பூர்வமான உரையாடலுக்கான தேவை அவசரமானது. இந்தப் பின்னணியில் வுமைவுழம இல் கங்குலி வல்பொல அறிமுகமாகிறார். TikTok இல் ஒரு எழுச்சி குரலாக, அவர் நீண்ட காலமாக சமூகத்தை ஆட்கொண்டிருக்கும் பழைய கருத்துக்களையும், உளவியல் பிம்பங்களையும், மற்றும் வெறுமையான வலிமை சார்ந்த அழைப்புகளையும் எதிர்க்கிறார். அவரை தனித்துவமாகக் காட்டுவது, கடினமான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அவரது துணிச்சலல்ல, அதை அவர் துல்லியமாக, நகைச்சுவையுடன் மற்றும் மனதளவில் வெளிப்படையாக மேற்கொள்வதுதான். கங்குலி தனது TikTok தளத்தை, வெறும் பொழுதுபோக்கு மேடையாய் மட்டும் பயன்படுத்தாமரல், சமூக மாற்றத்திற்கான கருவியாகவும் மாற்றியுள்ளார்.
கங்குலியைப் பொறுத்தவரை, TikTok என்பது வெறும் டிரெண்ட்கள் அல்லது வைரல் நடனங்களுக்கானது மட்டுமல்ல. அது முக்கியமான உரையாடல்களைத் தூண்டுவதாக இருந்தது. இன்றும் அதுவே தொடர்கிறது. TikTok என்பது அதை சரியான கருவியாக பயன்படுத்துவோருக்கு ஒரு வலிமையான கருவியாகும் என்று அவர் கூறுகிறார். கடினமான தலைப்புகளில் பேசவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதே எண்ணம் கொண்ட மற்றவர்களுடன் இணையவும் இது உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. புவியியல் தடைகளை உடைத்து, உலகளாவிய மக்களுக்கு அவரது செய்திகளை அணுகக்கூடிய வகையில் மாற்றுவதில்தான் இந்த தளத்தின் சக்தி உள்ளது. இது இலங்கையையும் நமது கண்டத்தையும் தாண்டி பயணிக்கிறது, என்று தனது பணியின் விரிவான தாக்கத்தை அவர் வலியுறுத்துகிறார்.
இலகுவான தன்மைக்கும் ஆழத்திற்கும் இடையேயான இந்த சமநிலைதான் கங்குலியை தனித்து காட்டுகிறது. அவர் கடினமான தலைப்புகளை தவிர்க்கவில்லை, ஆனால் அவை அவரது உள்ளடக்கத்தை ஆக்கிரமிக்கவும் விடவில்லை. மாறாக, அவர் நகைச்சுவையை ஆழமான விடயங்களுடன் கலக்கிறார். நகைச்சுவை காட்சிகளையும் அனைவரும் தொடர்புகொள்ளக்கூடிய சூழ்நிலைகளையும் பயன்படுத்தி மன நலம், பாலின எதிர்பார்ப்புகள், மற்றும் சமூக விதிமுறைகளின் வரம்புகள் பற்றிய கவனத்தை ஈர்க்கிறார்.
இந்த அணுகுமுறை கடினமான உரையாடல்களை அணுகக்கூடியதாகவும், சில வகைகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் மாற்றுகிறது. நகைச்சுவையை சமூக விழிப்புணர்வோடு கலக்கும் அவரது திறன் அவரது படைப்பாற்றலுக்கு மட்டுமல்லாமல், உடனடித்தன்மையையும் நேர்மையையும் ஊக்குவிக்கும் TikTok இன் வடிவமைப்பின் சக்திக்கும் சான்றாக உள்ளது.
எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் சமூக ஊடக உலகில், TikTok போன்ற தளங்கள் மாற்றத்தின் சக்திவாய்ந்த காரணிகளாக மாறியுள்ளன. கங்குலி வல்பொல, சமூக ஊடகங்களை வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல், பரிந்துரைப்பு, கல்வி மற்றும் மாற்றத்திற்காகவும் பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். மன நலம், பாலின பாத்திரங்கள் மற்றும் சமூக எதிர்பார்ப்புகள் பற்றிய உண்மையான, வெளிப்படையான உரையாடல்கள் மூலம் தனது பார்வையாளர்களுடன் இணையும் அவரது திறன், புறக்கணிக்கப்பட்டதாக அல்லது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக உணரும் மக்களுக்கு ஒரு வழிகாட்டியாக அவரை மாற்றியுள்ளது.
நகைச்சுவை, பாதிப்புக்குள்ளாகும் தன்மை மற்றும் படைப்பாற்றலைப் பயன்படுத்தி, சமூக ஊடகங்கள் அதிகாரமளித்தல் மற்றும் சமூக மாற்றத்திற்கான கருவியாக இருக்க முடியும் என்பதை கங்குலி காட்டியுள்ளார். பெரும்பாலும் கேட்கப்படாத குரல்களை உரக்க ஒலிக்க TikTok அவருக்கு ஒரு மேடையை வழங்கியுள்ளது, இதன் மூலம் சில நேரங்களில் மிகவும் அர்த்தமுள்ள மாற்றம் எதிர்பாராத இடங்களில் இருந்து வருகிறது என்பதை அவர் நிரூபித்துள்ளார்.