செய்திகள்
மலையக ரயில் சேவையில் தாமதம்

Jan 12, 2025 - 10:37 AM -

0

மலையக ரயில் சேவையில் தாமதம்

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.


இதன் காரணமாக, மலையக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து மண்ணை அகற்றுவதற்காக ரயில்வே பணியாளர்கள் தற்போது பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.


அதன்படி, விரைவில் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக, கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு இயக்கப்படவிருந்த இரவு நேர அஞ்சல் ரயில் மற்றும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படவிருந்த ரயில் ஆகியவை தொடர்புடைய ரயில் பாதைகள் வழமைக்கு திரும்பும் வரை தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05