வடக்கு
தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தேன்

Jan 14, 2025 - 04:33 PM -

0

தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தேன்

இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக தமிழக முதலமைச்சருடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் கேட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார்.

 

தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளையின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் நிகழ்வின் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக தமிழக முதலமைச்சருடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் கேட்டுள்ளேன். வெகு விரைவில் இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான சந்திப்பு நடைபெறும்.

 

தமிழக அரசின் அழைப்பின் அயலகத் தமிழர் தின நிகழ்வில் கலந்து கொண்ட போதே தமிழக முதலமைச்சரிடம் இக்கோரிக்கையை விடுத்திருந்தேன். அதற்கான பேச்சு வார்த்தைகள் விரைவில் நடத்தப்படும் என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05