Header Logo

ஏனையவை
ஒருதொகை சிறிய சங்குகளுடன் ஒருவர் கைது

Jan 15, 2025 - 05:54 PM -

0

ஒருதொகை சிறிய சங்குகளுடன் ஒருவர் கைது

புத்தளம், கற்பிட்டி - பராமுன கடல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட ஒருதொகை சிறிய சங்குகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.

 

வடமேற்கு கடற்படைக்குச் சொந்தமான விஜய கடற்படையின் விஷேட ரோந்து கப்பல் கற்பிட்டி - பராமுன பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது, குறித்த கடல் பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிங்கி இயந்திர படகு ஒன்றை பரிசோதனை செய்தனர்.

 

இதன்போது, குறித்த டிங்கி இயந்திர படகில் 7 சென்றி மீற்றர் அளவு கொண்ட சிறிய அளவிலான சங்குகள் இருந்துள்ளமை அவதானித்துள்ளனர்.

 

குறித்த படகில் 15 உர மூடைகளில் அடைக்கப்பட்ட நிலையில் 2137 சிறிய அளவு கொண்ட சங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பிட்டி, மண்டலகுடா பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட சிறிய சங்குகள், டிங்கி இயந்திர படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கடல் தொழில் நீரியவள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என கடற்படையினர் தெரிவித்தனர்.

--


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title