Jan 16, 2025 - 10:28 AM -
0
அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணி தொடரை 2 - 0 என்ற கணக்கில் முதலிலே கைப்பற்றி விட்டது.
இதனையடுத்து இரு மகளிர் அணிகள் இடையிலான 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (16) தொடங்கியது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 435 ஓட்டங்களை குவித்தது. தொடக்க வீராங்கனைகளாக மந்தனா (135), பிரதிகா ராவல் (154) சதம் அடித்து அசத்தினர். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்களை குவித்து இந்தியா சாதனை படைத்துள்ளது.
மேலும் அதிக ரன்கள் ஓட்டங்களை அணிகள் பட்டியலில் இந்தியா 4 ஆவது இடத்தில் உள்ளது. முதல் 3 இடங்களில் நியூசிலாந்து அணி உள்ளது.
இதனையெல்லாம் விட ஒருநாள் போட்டியில் ஆண்கள் இந்திய அணி குவித்த ஓட்டங்களை விட பெண்கள் அணி ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்களை குவித்து சாதனை படைத்துள்ளது. ஆண்கள் அணி மேற்கிந்திய அணிக்கு எதிராக 418 எடுத்ததே அதிக ஓட்டங்களாக இருந்தது. அதனை தற்போது பெண்கள் முறியடித்துள்ளது.