Jan 17, 2025 - 01:52 PM -
0
கண்டி புசல்லாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நயாப்பன மேல் பிரிவு தோட்டத்தில் உள்ள தேயிலை மலையில் சிறுத்தை ஒன்றின் சடலம் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
அப்பிரதேச மக்கள் சிறுத்தையின் சடலத்தை இனங்கண்டு அந்த தோட்டத்தில் உள்ள மடுவத்திற்க்கு சடலத்தை கொண்டு சென்று புசல்லாவ பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து கம்பளை வனஜீவராசி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கொண்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
--