வடக்கு
விபச்சாரத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது

Jan 30, 2025 - 02:40 PM -

0

விபச்சாரத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கோண்டாவில் பகுதியில் உள்ள மேல் மாடி வீடொன்றினை வாடகைக்கு பெற்று, கீழ் வீட்டில் வசிப்பவர்களுக்கு தெரியாமல், மிக இரகசியமாக மேல் மாடியில் 17 வயது சிறுமி உள்ளிட்ட இருவரை வைத்து நபர் ஒருவர் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

 

இது குறித்து யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (29) குறித்த வீட்டினை சுற்றி வளைத்து மேல் வீட்டில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுமி உள்ளிட்ட இரு பெண்களையும், அவர்களை வைத்து விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்தில் 36 வயதுடைய நபரையும் கைது செய்தனர். 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05