செய்திகள்
கட்டுநாயக்கவில் சிக்கிய குஷ்

Feb 1, 2025 - 10:30 AM -

0

கட்டுநாயக்கவில் சிக்கிய குஷ்

குஷ் போதைப்பொருளுடன் விமானம் மூலம் இந்நாட்டிற்கு வந்த  சந்தேக நபர் ஒருவரும் மற்றும் குறித்த கடத்தலுக்கு உதவிய மற்றும் துணை போன சந்தேக நபர் ஒருவரும் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவினரால் நேற்று (31) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து  2 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளுடன் விமானம் மூலம் இலங்கைக்கு வந்த சந்தேகநபரும் அவருக்கு உதவிய மற்றுமொரு சந்தேகநபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 31 மற்றும் 36 வயதுடைய ஹங்வெல்ல மற்றும் உடுகம்பல பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

 

 சம்பவம் தொடர்பில் விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05