Feb 9, 2025 - 11:27 AM -
0
திருநள்ளாறு கோவில் பெயரிலான போலி இணையதளம் மூலமாக தரிசனம், அர்ச்சனைக்கு கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்து மோசடி நடந்துள்ளது.
போலி இணையதளத்தை நம்பி வெளிநாடு, வெளிமாநில பக்தர்கள் பல்லாயிரக்கணக்கோனோர் ஏமாந்ததும் தெரிய வந்துள்ளது.
திருநள்ளாறு கோவில் பெயரில் போலி இணையதளம் மூலம் கோடிக்கணக்கில் பணம் மோசடி நடந்துள்ளதாக கோவில் நிர்வாக அதிகாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த போலி இணையதள மோசடியில் திருநள்ளாறு பகுதியை சேர்ந்த அதிகாரிகள் முதல் பல முக்கிய நபர்களுக்கு தொடர்பு உள்ளது பொலிஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.