Feb 9, 2025 - 12:40 PM -
0
காலையில் எழும்போது சோர்வாக ஆரம்பித்து பின்னர், அந்த நாளே சோர்வானதாக முடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. அதற்கு பதிலா தினமும் இந்த 5 செயலை செய்வதால் உங்களுடைய தினத்தை புத்துணர்ச்சியாக மாற்ற முடியும்.
முதலில், உங்கள் வழக்கமான நேரத்தை விட 15 நிமிடங்களுக்கு முன்பே எழுந்திருங்கள். இதனால் அவசரமாக எந்த வேலையும் செய்யாமல் நிதானமாக செய்ய முடியும். மேலும் காலையில் ஏற்படும் டென்ஷனை தவிர்க்கலாம்.
இரண்டாவது, இரவு நீண்ட உறக்கத்திற்கு பின் எழுவதால் நீர் கண்டிப்பாக உடலுக்கு தேவைப்படும். ஆகையால் ஒரு க்ளாஸ் நீரை அருந்தவும். மேலும் புத்துணர்ச்சி கிடைக்க, முகத்தில் குளிர்ந்த நீரை தெளிக்கலாம், இல்லை என்றால் சிறு குளியல் போடலாம். இது உங்கள் நாளை புத்துணர்ச்சியாக வைக்க உதவும்.
மூன்றாவது, இதை செய்வதால் நாள் முழுக்க உங்கள் சோர்வை தள்ளி வைக்க முடியும். 10-15 நிமிடங்கள் சில லேசான நடை பயிற்சி, யோகா, புஷ் அப்ஸ் என உடற்பயிற்சிகளை செய்யலாம்.
நான்காவது, வீட்டில் இருந்த படியே சூரிய ஒளியை பார்க்கலாம் அல்லது சிறிது தூரம் நடந்து சென்று சூரிய ஒளியை பெறுவதால் உங்கள் மன நிலை பிரகாசமாக மாறும். உங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.
ஐந்தாம், நிதானமாக அமர்ந்து, தியானம் அல்லது இன்றைய நாளில் என்ன செய்யலாம் என்ற சிறு முன்னோட்டம் போல சிந்திப்பதால் சுமுகமாக இந்த நாள் ஆரம்பிக்கலாம்.