உலகம்
பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 51 பேர் பலி

Feb 11, 2025 - 09:59 AM -

0

 பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 51 பேர் பலி

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கவுதமலாவில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 51 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

 

பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த பேருந்து வீதியோர தடுப்பின் மீது மோதி பள்ளத்தாக்கில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

இதில் 51 பேர் பலியானதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான பேருந்து பாலத்தில் இருந்து கவிழ்ந்து கழிவுநீரால் மாசுபட்ட ஆற்றில் விழுந்துள்ளது. 70-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து இடிபாடுகளில் இருந்து 51 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக மீட்புக்குழு தெரிவித்துள்ளது.

 

விபத்துக்குள்ளான பேருந்து எல் ப்ரோக்ரெசோவில் உள்ள சான் அகஸ்டின் அகாசாகுவாஸ்ட்லான் நகரத்திலிருந்து கவுதமாலா நகருக்கு வடகிழக்கில் சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்தது. கவுதமாலா அதிபர் பெர்னார்டோ அரேவலோ இந்த துயரச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து, தேசிய அவசர நிலையை அறிவித்துள்ளார். "இன்று கவுதமாலாவுக்கு ஒரு கடினமான நாள்" என்றும் அவர் கூறியுள்ளார்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05