வடக்கு
குளவி கொட்டியதில் 9 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Feb 11, 2025 - 10:03 AM -

0

குளவி கொட்டியதில் 9 பேர் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியாவில் குளவி கொட்டியதில் 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் குளவி கொட்டியதில் 9 பேர் பாதிக்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இன்று இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வீதியில் பலர் பயணித்துக் கொண்டிருந்த போதே குளவிக் கொட்டுதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவருகிறது.


இதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 9 பேர் குளவிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05