Feb 12, 2025 - 09:26 AM -
0
காலியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளின் போது அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ குஹ்னேமன் பந்துவீச்சு முறை பற்றி சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பில் போட்டி அதிகாரிகளால் முறை்ப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குஹ்ன்மனின் பந்துவீச்சு நடவடிக்கையில் இருந்து விடுவிக்கப்படும் வரை அவர் சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீச முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் நிறைவடைந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, காலியில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இவர் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.