Feb 15, 2025 - 03:01 PM -
0
மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி அவர்களுக்கு நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (15) சனிக்கிழமை காசல்ரீ பகுதியில் உள்ள சமஹவுஸ் விருந்தகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் டக்ளஸ் நாணயக்கார, செயலாளர் திலங்க காமினி பொருளாளர் மு.இராமசந்திரன், நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.தியாகு மற்றும் நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர்கள் ஆகியோர் இணைந்து அன்னாரின் உருவப்படத்திற்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
--

