Feb 15, 2025 - 09:05 PM -
0
பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
யாழ்ப்பாண விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகிறார்.
இந்த நிலையில் இன்று (15) பிற்பகல் 2 மணிக்கு யாழ். சுழிபுரம், வழக்கம்பரை முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
குறித்த கூட்டத்தில் கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன், சண்முகநாதன் ஶ்ரீபவானந்தராஜா, கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
--