செய்திகள்
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் கம்பஹா வைத்தியசாலையில்

Feb 26, 2025 - 11:29 AM -

0

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் கம்பஹா வைத்தியசாலையில்

மினுவங்கொடை, பத்தடுவன சந்தியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவரால் இன்று (26) காலை 11.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் 36 வயதுடைய ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

 

துப்பாக்கிச் சூடு நடந்தபோது, ​​துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவரின் கால் மற்றும் கையில் காயங்கள் ஏற்பட்டு தற்போது கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

காயமடைந்த நபர் கெஹல்பத்தர பத்மேவின் பாடசாலை நண்பர் என்பதும் தெரியவந்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05