Mar 1, 2025 - 10:05 PM -
0
மீரிகம பொலிஸ் பிரிவின் 20 ஏக்கர் பகுதியில் உள்ள கல்குவாரியில் வேலை செய்து கொண்டிருந்த மூன்று பேர் மீது திடீரென பாறை சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து இன்று (01) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் காயமடைந்த இருவரும் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தில் உயிரிழந்தவர் தவலம்பிட்டிய, மீரிகம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சடலம் கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மீரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

