உலகம்
2 வாரங்களில் 5ஆவது முறையாக நிலநடுக்கம்

Mar 2, 2025 - 09:15 PM -

0

2 வாரங்களில் 5ஆவது முறையாக நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று மதியம் 2.31 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இது ரிச்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் நிலையம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. 

இந்நிலநடுக்கம் 140 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. 

கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி ஆப்கானிஸ்தானில் 4.6 என்ற ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. 

இந்நிலநடுக்கம் 120 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. கடந்த பெப்ரவரி 22ஆம் திகதி ஆப்கானிஸ்தானில் ரிச்டர் அளவுகோலில் 4.2 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் 150 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. 

இதேபோன்று, பெப்ரவரி 18 திகதி ரிச்டர் அளவுகோலில் 4.6 மற்றும் 4.3 என்ற அளவிலான இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. 

இது முறையே 10 கிலோமீற்றர் மற்றும் 180 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால், ஆப்கானிஸ்தானில் கடந்த 2 வாரங்களில் 5ஆவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05