செய்திகள்
கணேமுல்ல சஞ்சீவ கொலை - சந்தேகநபர்கள் விளக்கமறியல் காலம் நீடிப்பு

Mar 7, 2025 - 12:31 PM -

0

கணேமுல்ல சஞ்சீவ கொலை - சந்தேகநபர்கள் விளக்கமறியல் காலம் நீடிப்பு

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

குறித்த சந்தேக நபர்கள் இன்று (07) ஸ்கைப் மூலம் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05