Mar 9, 2025 - 04:35 PM -
0
கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் துப்புரவு பணிகள் இன்று (09) அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய கோப்பாய் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவனின் வழிகாட்டலில் இன்றைய தினம் கோப்பாய் பிரதேச செயலாளர் சிவசிறி தலைமையில் குறித்த வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பிரதேச வைத்தியசாலையின் பணிப்பாளர், பணியாளர்கள், நோயாளர் நலன்புரி சங்கத்தினர், அச்சுவேலி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள், அச்சுவேலி சிற்றூர்தி சங்கத்தினர் மற்றும பொதுமக்கள், சன சமூக நிலைய உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அச்சுவேலி பிரதேச சபையின் உதவியுடன் பிரதேச வைத்தியசாலையில் உள்ளக வளாகங்களை துப்புரவு செய்தனர்.
--