செய்திகள்
பாடசாலை விடுமுறை, சிவனொளி பாதமலை யாத்திரை பருவத்திற்காக சிறப்பு ரயில் சேவை

Mar 10, 2025 - 06:54 PM -

0

பாடசாலை விடுமுறை, சிவனொளி பாதமலை யாத்திரை பருவத்திற்காக சிறப்பு ரயில் சேவை

2025 மார்ச் மாதத்தில் பாடசாலை விடுமுறை மற்றும் ஸ்ரீபாத யாத்திரை பருவத்துடன் இணைந்ததாக சிறப்பு ரயில் சேவை திட்டம் ஒன்றை ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. 

ரயில்வே பொது முகாமையாளர் ஜே.ஐ.டி. ஜெயசுந்தர அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார். 

அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை மற்றும் காங்கேசன்துறைக்கு சிறப்பு ரயில் சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

குறித்த சிறப்பு ரயில் சேவைகள் பின்வருமாறு, 

01. சிறப்பு ரயில் 01 - கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு. 

கொழும்பு கோட்டையில் இருந்து இரவு 07.30 க்கு புறப்படும் ரயில், 2025 மார்ச் 12, 14, 16, 21, 23, 28 மற்றும் 31 ஆகிய திகதிகளில் பயணிக்கும். 

02. சிறப்பு ரயில் 02 - பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு. 

பதுளையில் இருந்து மாலை 5.20 க்கு புறப்படும் ரயில், 2025 மார்ச் 12, 14, 16, 21, 23, 28 மற்றும் 31 ஆகிய திகதிகளில் பயணிக்கும். 

03. சிறப்பு ரயில் 03 - கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு. 

காங்கேசன்துறை நோக்கி காலை 05.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் ரயில், 2025.03.13 முதல் 2025.03.31 தினசரி பயணிக்கும். 

04. சிறப்பு ரயில் 04- காங்கேசன்துறை - கொழும்பு கோட்டை. 

காங்கேசன்துறையில் இருந்து பிற்பகல் 01.50 மணிக்கு புறப்படும் ரயில், 2025.03.13 முதல் 2025.03.31 தினசரி பயணிக்கும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05