உலகம்
சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல்

Mar 13, 2025 - 09:22 AM -

0

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல்

கடந்த 9 மாதங்களாக விண்வெளி மையத்தில் சிக்கி தவித்து வரும் சுனிதா வில்லியம்ஸ், புட்ஸ் வில்மோர் பூமி திரும்வுவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இன்று (13) அதிகாலை 5.18 மணிக்கு புளோரிடாவில் இருந்து டிராகன் விண்கலத்துடன் சீறிபாய தயாராக இருந்த பால்கன் 9 ராக்கெட்டில் கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-10 மிஷன் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

சுனிதாவை அழைத்து வரும் க்ரூ-10 மிஷன் ஒத்திவைக்கப்பட்டதற்கு ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே காரணம் என்று நாசா தெரிவித்துள்ளது. 

அதனை சரிசெய்யும் பணியில் விண்வெளி ஊழியர் ஈடுபட்டுள்ளனர் என்றும் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்ட பின் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4.56 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்த வாய்ப்பு உள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது. 

விண்வெளிக்கு சென்று தங்கி ஆய்வு செய்ய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்சும், புட்ச் வில்மோரும் கடந்த 5 ஜூன் 2024 அன்று போயிங்கின் ஸ்டார்லைனரில் 10 நாள் பயணமாக சென்றனர். ஆனால், ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் ஒன்பது மாதங்களாக விண்வெளி நிலையத்திலிருந்து திரும்ப இயலாமல் தவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05