விளையாட்டு
ஆர்.சி.பி. புதிய தலைவரை புகழ்ந்து தள்ளிய விராட் கோலி

Mar 18, 2025 - 11:36 AM -

0

ஆர்.சி.பி. புதிய தலைவரை புகழ்ந்து தள்ளிய விராட் கோலி

ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகிறது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த நிலையில், ஐ.பி.எல். தொடங்கும் முன்பு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணியின் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் ஆர்.சி.பி. அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய அணித்தலைவரான ரஜத் பட்டிதாருக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று விசேட கோரிக்கை விடுத்தார். மேலும், ரசிகர்களும் புதிய அணித்தலைவருக்கு தங்களது அன்பை வழங்கி ஆதரவளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். 

இது குறித்து பேசிய விராட் கோலி, "இவர் (ரஜத் பட்டிதார்) உங்களை நீண்ட காலம் வழிநடத்துவார். அவருக்கு அன்பை கொடுங்கள், அவர் மிகத் திறமையானவர். அவர் பிரான்சைஸ்-க்கு நன்மை செய்து. ஐ.பி.எல். தொடரில் அணியை முன்னோக்கி அழைத்து செல்வார். நல்ல தலைவராக உருவெடுப்பதற்கு அவரிடம் எல்லா திறமையும் உள்ளது," என்று தெரிவித்தார். 

மார்ச் 22ஆம் திகதி ஆரம்பமாகும் 18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவராக ரஜத் பட்டிதார் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பொப் டூ பிளெசிஸ்ெக்கு மாற்றாக ஆர்.சி.பியின் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். ரஜத் பட்டிதார் 2021ஆம் ஆண்டு முதல் ஆர்.சி.பி. அணிக்காக விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05