Mar 19, 2025 - 11:00 PM -
0
விளக்கமறியலில் வைக்கப்பட்ட பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அதன்படி, அவர் அங்குள்ள சாதாரண பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (19) காலை நீதிமன்றத்தில் சரணடைந்த தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நாளை (20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.