செய்திகள்
உள்நாட்டு துப்பாக்கியுடன் கைதான நபர்

Mar 21, 2025 - 07:25 AM -

0

உள்நாட்டு துப்பாக்கியுடன் கைதான நபர்

ஹூங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரன்ன பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஹூங்கம பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (20) முற்பகல் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

43 வயதுடைய ரன்ன, லேனமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹூங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05