செய்திகள்
மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

Mar 21, 2025 - 07:52 AM -

0

மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

25 வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் இறுதி நாள் இன்றாகும். 

அதன்படி, நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செலவின தலைப்புகள் விவாதிக்கப்பட உள்ளன. 

இன்று காலை 10 மணிக்கு விவாதம் ஆரம்பமாகி, மாலை 6 மணிக்கு நிறைவடைந்ததன் பின்னர் வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. 

2025 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது 'வரவு செலவுத் திட்ட உரை' நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கடந்த 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து பெப்ரவரி 18ஆம் திகதி முதல் இன்று (25) வரை, 07 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) மீதான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றது. 

அதற்கமைய, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு 109 மேலதிக வாக்குகளால் பெப்ரவரி 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 155 வாக்குகளும், எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 

இதற்கமைய குழு நிலை விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 19 நாட்கள் இடம்பெற்றிருந்த நிலையில், 2025 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (21) மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05