விளையாட்டு
சிஎஸ்கே வீரர் பெயரில் வீதி!

Mar 21, 2025 - 07:33 PM -

0

சிஎஸ்கே வீரர் பெயரில் வீதி!

ஐபிஎல் தொடர் நாளை (20) கொல்கத்தாவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இதன் தொடக்க போட்டியில் கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மோதுகின்றனர்.

 

நடப்பு ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் அஸ்வின் சென்னை அணிக்காக விளையாட உள்ளார். அவர் சென்னை அணியிடன் இணைந்து தீவிர வலை பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில் சென்னையில் மேற்கு மாம்பலத்தில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் 1 ஆவது தெருவிற்கு 'ரவிச்சந்திரன் அஷ்வின் வீதி' என பெயர் சூட்ட சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கார்த்திக் என்பவரின் கோரிக்கையை ஏற்று, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05