Mar 27, 2025 - 06:39 AM -
0
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் Guwahati மைதானத்தில் நேற்றிரவு (26) இடம்பெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் 6ஆவது லீக் போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக ஜெய்ஷ்வால் 29 ஓட்டங்களையும், துருவ் ஜூரெல் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
கொல்கத்தா அணியின் பந்துவீச்சில் வைபவ் அரோரா, ஹர்ஷிட் ரானா, மொயின் அலி மற்றும் வருன் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து 152 என்ற வெற்றி இலக்கை நோக்கிய களமிறங்கிய கொல்கத்தா அணி 17.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
கொல்கத்தா அணியின் சார்பாக குயின்டன் டி கொக் ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்களையும், ரகுவன்ஷி ஆட்டமிழக்காமல் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
ராஜஸ்தான் அணியின் பந்தவீச்சில் வனிந்து ஹசரங்க மாத்திரம் 1 விக்கெட்டினை வீழ்த்தினார்.

