செய்திகள்
யாழில் பாழடைந்த வீட்டில் சிக்கிய கஞ்சா

Mar 27, 2025 - 09:41 AM -

0

யாழில் பாழடைந்த வீட்டில் சிக்கிய  கஞ்சா

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிகண்டிப் பகுதியில் இன்று (27) காலை ஒரு தொகை கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இராணுவப் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பில் குறித்த பகுதியில் பழைய வீடொன்றில் மறைத்து வைக்கப்படிருந்த நிலையில் குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.


கைப்பற்றப்பட்டுள்ள 75 கிலோ கிராமுக்கும் அதிகளவான போதைப்பொருள் வல்வெட்டித்துறை பொலிசாரிடம் கையளிக்கப்படவுள்ளதுடன்,  சம்பவம் தொடர்பில் எவரும் கைது கைது செய்யப்படவில்லை. 
 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05