விளையாட்டு
செய்தியாளரின் கேள்விக்கு கடுப்பான சிஎஸ்கே கோச்

Mar 29, 2025 - 10:27 AM -

0

செய்தியாளரின் கேள்விக்கு கடுப்பான சிஎஸ்கே கோச்

ஐ.பி.எல். 2025 சீசனின் 8 ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (28) நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

 

முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்களை எடுத்தது.

 

இதையடுத்து, 197 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்களை மட்டுமே எடுத்து 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

 

இதன்மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை ஆர்.சி.பி. அணி வீழ்த்தியுள்ளது.

 

இந்நிலையில், போட்டிக்கு பின்பு சிஎஸ்கே அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

 

அப்போது மற்ற அணிகள் பெரிய ஸ்கோரை அடிக்கும்போது சிஎஸ்கே அணி துடுப்பாட்டத்தில் குறைவான ஓட்டங்களை அடிக்கும் முறை காலாவதியாகி விட்டதாக நீங்கள் நினைக்கவில்லையா? என்று செய்தியாளர் எழுப்பினார்.

 

இதற்கு கோபத்துடன் பதில் அளித்த பிளெமிங், "நீங்கள் ஃபயர்பவரைப் பற்றி பேசுகிறீர்கள். எங்களிடம் ஃபயர்பவர் முழுமையாக உள்ளது. இந்தக் கேள்வி எனக்குப் புரியவில்லை. தொடரின் முடிவில், யார் வெற்றி பெறுவார்கள் என்று பாருங்கள். நாங்கள் பாசிடிவ் பிராண்ட் கிரிக்கெட்டை ஆடி வருகிறோம். எங்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்.

 

நீங்கள் கேட்டது ஒருவிதத்தில் முட்டாள்தனமான கேள்வி. நாங்கள் பல ஆண்டுகளாக உங்களிடம் கூறிவருகிறோம். சேப்பாக்கத்தில் விளையாடுவதால் எங்களுக்கு எந்த சாதகமும் இல்லை.

 

சேப்பாக்கத்தை விட வேறு மைதானங்களில் நாங்கள் பலமுறை வென்றுள்ளோம். கடந்த 2 வருடங்களாக சேப்பாக்கம் மைதானத்தை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது பழைய சேப்பாக்கம் மைதானம் இல்லை. பழைய சேப்பாக்கம் மைதானத்தில் 4 சுழற்பந்து வீச்சாளர்களை விளையாட வைக்கலாம். ஒவ்வொரு மைதானத்தின் தன்மை என்ன என்பதைப் புரிந்துகொள்ள நாங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது என்று தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05