Mar 29, 2025 - 11:59 AM -
0
லாகூரில் பிறந்த சகலதுறை ஆட்டக்காரர் Muhammad Arslan Abbas, இன்று (29) நேப்பியரில் உள்ள மெக்லீன் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியூசிலாந்திற்காக அணிக்காக விளையாடி உள்ளார்.
21 வயதான Abbas பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 24 பந்துகளில் அரைசதம் அடித்து ஒருநாள் அறிமுகப் போட்டியில் அதிவேகமாக அரைசதம் பெற்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
குறித்த சாதனையை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிராக 26 பந்துகளில் அரைசதம் அடித்த சகலதுறை ஆட்டக்காரர் குருணால் பாண்ட்யாவின் சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிட்டதக்கது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தெரிவு செய்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 344 ஓட்டங்களை பெற்றது.
345 ஓட்டங்களை வெற்றி இலக்காக நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 44.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 271 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

