Mar 30, 2025 - 10:20 AM
செய்திகள்
புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் - வழிகாட்டுதல் தொகுப்பு வௌியீடு
பண்டிகைக் காலத்தில் இலங்கையில் நடத்தப்படும் விளையாட்டு நிகழ்வுகளின் போது ஏற்படும் விபத்துகள் மற்றும் கடுமையான சுகாதார நிலைமைகளைத் தடுப்பதற்காக வழிகாட்டுதல் தொகுப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்றாத நோய்கள் பிரிவு இந்த பொதுவான வழிகாட்டுதல் தொகுப்பை முன்வைத்துள்ளது. இதில் அனைத்து விளையாட்டு நிகழ்வுகளிலும் பின்பற்றப்பட வேண்டிய பொதுவான வழிகாட்டுதல்களும், குறிப்பிட்ட விசேட நிகழ்வுகளுக்கான வழிகாட்டுதல்களும் விவரிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் புத்தாண்டு காலத்தில் நடைபெறும் பல்வேறு பண்டிகை நிகழ்வுகளுக்கு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக, கிராமத்தைச் சுற்றி ஓடுதல், மராத்தான் போட்டிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற நீண்ட நேரம் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள், போட்டிக்கு குறைந்தபட்சம் 6 வாரங்களுக்கு முன்பு பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அடையாளம் காணப்பட்ட நோய் நிலைமைகளைக் கொண்ட பங்கேற்பாளர்கள், தங்கள் வழக்கமான சுகாதார சேவை வழங்குநரிடமிருந்து அந்த விளையாட்டு நிகழ்வில் பங்கேற்க தகுதியானவர் என்பதை உறுதிப்படுத்தும் வைத்திய அனுமதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், புத்தாண்டு காலத்தில் நடைபெறும் ஒவ்வொரு விளையாட்டு நிகழ்விலும், கிராமத்தைச் சுற்றி ஓடுதல், நீச்சல், படகு ஓட்டப்போட்டி, எலுமிச்சை பழத்தை கரண்டியில் வைத்து எடுத்துச் செல்லும் போட்டி, கிரீஸ் மரத்தில் ஏறுதல், கயிறு இழுத்தல், சாக்கு ஓட்டப்போட்டி போன்ற போட்டி நிகழ்வுகளுக்கு சிறப்பு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வுகளுக்கு தனித்தனியாக வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்கு சுகாதார அமைச்சின் தொற்றாத நோய்கள் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
MOST READ
காணொளி

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!













