Mar 30, 2025 - 04:07 PM -
0
யாழ்ப்பாணம் நகரில் 9 கிலோ 300 கிராம் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இருவர் இன்று (30) கைது செய்யப்பட்டனர்.
யாழ். மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி வழிகாட்டலில் உதவி பொலிஸ் பரிசோதகர் நந்தகுமார் குழுவினர் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
கைதான 40 வயது மதிக்கத்தக்க இருவரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
--