Mar 31, 2025 - 07:11 PM -
0
இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் கடந்த 26 ஆம் திகதியில் இருந்து மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது.
நேற்று (30) தங்கம் ஒரு கிராம் 8,360 ரூபாவுக்கும், ஒரு சவரன் 66,880 ரூபாவுக்கும் விற்பனையானது.
இந்த நிலையில் வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு 520 ரூபா உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது.
தங்கம் கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 425 ரூபாவுக்கும், சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 67,400 ரூபாவுக்கும் விற்பனையானது.
இந்நிலையில் இன்று ஒரேநாளில் 2 ஆவது முறையாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. காலையில் 520 ரூபா மாலையில் 200 ரூபா என இரண்டு முறை தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இதன்மூலம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபா உயர்ந்து 67,600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து 8,450 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 113 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.1,13,000 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.