செய்திகள்
புதிய அரசியலமைப்பு நிச்சயமாக கொண்டு வரப்படும்

Apr 1, 2025 - 08:13 AM -

0

புதிய அரசியலமைப்பு நிச்சயமாக கொண்டு வரப்படும்

புதிய அரசியலமைப்பு ஒன்றை அறிமுகப்படுத்துவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்குள் கட்டாயமாக இடம்பெறும் என்று நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார தெரிவித்தார்.


அதன் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.


நேற்று (31) இரவு டிவி தெரண ஊடாக ஒளிபரப்பான 360 நிகழ்ச்சியில் இணைந்து கொண்டு, அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இதனை குறிப்பிட்டார்.


"நாங்கள் பாராளுமன்றத் தேர்தலை நடத்தினோம், அதற்குப் பிறகு இப்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டு ஆண்டுகள் தாமதமாகியது, அதை இப்போது நடத்த வேண்டும். அதற்குப் பிறகு மாகாண சபைகள், இந்த ஆண்டு இறுதியில் அல்லது... அதற்கு சரியான திகதி இல்லை. விரைவில் அந்தத் தேர்தலையும் நடத்த வேண்டும்."

 

“புதிய அரசியலமைப்பை கொண்டு வருவது, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது ஆகியவை இந்த ஆண்டு 05க்குள் நடைபெறும் என்று சொல்கிறேன். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்காவிட்டால், 05 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் சென்று மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.”  

Comments
0

MOST READ
01
02
03
04
05