செய்திகள்
ஹெரோயின் போதைப்பொருடன் மூவர் கைது

Apr 4, 2025 - 11:01 PM -

0

ஹெரோயின் போதைப்பொருடன் மூவர் கைது

 யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

யாழ் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குருநகர் பகுதியில் மூவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது 2 கிராம் 780 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

 

நாவற்குழி பகுதியை சேர்ந்த இருவரும், குருநகர் பகுதியை சேர்ந்த ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கைது செய்யப்பட்ட மூவரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05