Apr 7, 2025 - 07:22 PM -
0
சர்வதேச கிரிக்கெட் பேரவை பாகிஸ்தானுக்கு ஹெட்ரிக் அபராதம் விதித்துள்ளது.
பாகிஸ்தான் அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.
இதில் முதலில் நடந்த டி20 தொடரை நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வௌ்ளையடிப்பு செய்தது.
இந்நிலையில், ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் மெதுவாக பந்து வீசியதற்காக ஐசிசி அபராதம் விதித்தது.
இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் மெதுவாக பந்து வீசியதற்காக பாகிஸ்தான் அணிக்கு மேலும் ஐந்து சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.