Apr 9, 2025 - 05:27 PM -
0
மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் கும்பாபிஷேகம் ஏதிர்வரும் 11 திகதி நடைபெறவுள்ள நிலையில் பூர்வாங்க கிரியைகள் ஆலயத்தில் தற்போது நடைபெற்று வருகின்றன.
பூர்வாங்க கிரியைகளிலும் பெரும் தொகையான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானின் நல் அருளை பொற்றுக்கொள்ளவதை காணக் கூடியதாகவுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க மாவை கந்தனின் கும்பாபிஷேக பெருவிழாவை மக்கள் 3 தசாப்தத்திற்கு மேல் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஈழ தேசத்திலும் புலம்பெயர் சேசத்திலும் வாழுகின்ற மாவை கந்தனின் அருள் வேண்டி செல்வதை காணக் கூடியதாக இருக்கின்றது.
இன்று (09) தருமபுரம் ஆதீனம் ஶ்ரீலஶ்ரீ 27 ஆவது குருமகா சந்நிதானம் மாசிலாமணி தேசிகஞானசம்பந்த பரமாசாரிய சுவாமி அவர்கள் மாவை கந்தனின் கும்பாபிஷேக கிரியைகள் வழிபாடுகளில் கலந்து கொண்டு இன்று நாடு திரும்பி உள்ளார்.
--