Apr 10, 2025 - 06:26 AM -
0
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நேற்றிரவு (09) ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 58 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் 23ஆவது லீக் போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 217 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக சாய் சுதர்ஷன் 82 ஓட்டங்களையும், ஷாருக் கான் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சில் மஷீஷ் தீக்சன மற்றும் தேஷ்பாண்டே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து 218 என்ற வெற்றி இலக்கை நோக்கிய களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 159 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் ஹெட்மையர் 52 ஓட்டங்களையும், அணித்தலைவர் சஞ்சு சம்சன் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் பிரதிஷ் கிருஷ்ணா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.