Apr 12, 2025 - 06:50 PM -
0
பதுளை - ஹாலிஎல பிரதேசத்தில் இருவேறு இடங்களில் மர்மமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஹாலிஎல நகரில் உள்ள முச்சக்கரவண்டி நிறுத்துமிடத்திற்கு அருகிலுள்ள வீதியில் உள்ள ஒரு கால்வாயில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், மற்றொன்று ஹாலிஎல பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்குப் பின்னால் கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை, மேலும் ஹாலிஎல பொலிஸர் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

