Apr 18, 2025 - 03:42 PM -
0
வசந்தகால கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று நுவரெலியா விக்டோரியா பூங்காவில் உத்தியோகபூர்வமாக மலர் கண்காட்சி இன்று (18) திறந்து வைக்கப்பட்டது.
இதனை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக இன்றும் நாளையும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்விற்கு நுவரெலியா மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திருமதி திலிகா கவிசேகர அம்மையார் அவர்களின் பங்கேற்புடன் நுவரெலியா மாநகர சபையின் ஆணையாளர் விஜயகோன் பண்டார அவர்களின் ஏற்பாட்டில் நுவரெலியா மாநகர சபையின் அனுசரணையில் உத்தியோபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இம் மலர் கண்காட்சியை கண்டு களிப்பதற்காக பெருந்திரளான பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
--