Apr 21, 2025 - 06:37 AM -
0
ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடர் ஜேர்மனியின் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று போட்டிகள் நேற்று நடந்தது. இதில் பெலாரஸ் வீராங்கனையான அரினா சபலென்கா, இத்தாலி வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினியுடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 7-5, 6-4 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டோபென்கோ 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

