Apr 23, 2025 - 11:39 AM -
0
மழை காரணமாக சிலாபம் நகரில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக "அத தெரண" செய்தியாளர் தெரிவித்தார்.
இதன் விளைவாக, சிலாபம் ஆனந்த தேசிய பாடசாலை மற்றும் சிலாபம் விஜய வித்தியாலயமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிலாபம் நகரில் பல வீதிகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சிலாபம் நகரில் வடிகால் அமைப்பு அடைபட்டதால் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

