செய்திகள்
சில பிரதேசங்களுக்கு இடியுடன் கூடிய மழை

Apr 24, 2025 - 01:47 PM -

0

சில பிரதேசங்களுக்கு இடியுடன் கூடிய மழை

கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். 

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

இது தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையை கீழே காணலாம்

Comments
0

MOST READ
01
02
03
04
05