செய்திகள்
கடும் மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

Apr 25, 2025 - 02:59 PM -

0

கடும் மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு கடுமையான மின்னல் தொடர்பாக எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.


அதன்படி, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.


மின்னல் மூலம் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
 


* மின்னல் மற்றும் இடி ஏற்படும் சமயத்தில் வெளியில் இருப்பதைத் தவிர்க்கவும்.

* உயரமான மரங்களின் கீழ் அல்லது திறந்தவெளியில் நிற்க வேண்டாம்.

* மின்சார உபகரணங்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05