உலகம்
வடகொரியா சர்வதேச சட்டத்தை மீறியதாக தென்கொரியா குற்றச்சாட்டு

Apr 29, 2025 - 02:17 PM -

0

வடகொரியா சர்வதேச சட்டத்தை மீறியதாக தென்கொரியா குற்றச்சாட்டு

நேட்டோ கூட்டமைப்பில் இணைய முயன்ற யுக்ரைன் மீது ரஷ்யா 2022ஆம் ஆண்டு போர் தொடுத்தது. 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையே ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்துக்குள் யுக்ரைன் படைகள் நுழைந்தன. தொடர்ந்து நடைபெற்ற தாக்குதலில் குர்ஸ்க் பிராந்தியத்தை யுக்ரைன் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. 

பின்னர் படைகள் மேற்கொண்டு உள்நுழைவதைத் தடுக்க ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டனர். இதில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியாவும் சுமார் 15,000 வீரர்களை அங்கு அனுப்பியது. 

ஆனால் யுக்ரைன் தாக்குதலில் சுமார் 4,000 வீரர்கள் இறந்தனர். இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் மேலும் 3,000 வீரர்களை ரஷ்யாவுக்கு வடகொரியா அனுப்பியது. 

இதனால் யுக்ரைன் தாக்குதலை முறியடித்த ரஷ்யா குர்ஸ்க் பிராந்தியத்தை மீண்டும் கைப்பற்றியது. எனவே யுக்ரைன் இராணுவத்தால் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடியை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையே குர்ஸ்க் பிராந்தியத்தைக் கைப்பற்ற உதவிய வடகொரியாவுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து புட்டின் கூறுகையில், குர்ஸ்க் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்ட வடகொரிய வீரர்கள் ரஷ்யாவை தங்களது சொந்த தேசம் போல கருதி வீரத்துடன் போரிட்டனர். அவர்களில் பலர் தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்தனர். அத்தகைய வீரர்களுக்கு ரஷ்யா மிகவும் கடமைப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். 

இந்தநிலையில் சர்வதேச சட்டத்தை மீறி ரஷ்யாவுக்கு இராணுவ வீரர்களை அனுப்பியதாக வடகொரியா மீது தென்கொரியா குற்றம்சாட்டி உள்ளது. ரஷ்யாவுக்கு இராணுவ வீரர்களை அனுப்பியதாக யுக்ரைன் முன்னரே குற்றம் சாட்டி இருந்தது. ஆனால் வடகொரியா தரப்பில் இதற்கு எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

Comments
0

MOST READ
01
02
03
04
05