Apr 30, 2025 - 12:35 PM -
0
இந்தியாவில் கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூரில் 3 கோடி ரூபா மதிப்பிலான 5,140 தொலைபேசிகள் திருடப்பட்ட விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் இருந்து பெங்களூருவுக்கு ஒரு கண்டெய்னரில் எடுத்துச்செல்லப்பட்ட 3 கோடி ரூபா மதிப்புள்ள செல்போன்கள் திருடப்பட்டது.
தொலைபேசிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக கூரியர் நிறுவனம் அளித்த புகாரில் வழக்குப்பதிந்து பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக கண்டெய்னர் டிரைவர் ராகுலை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்திய நிலையில் தற்போது 7 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 56 தொலைபேசிகளை பறிமுதல் செய்தனர். மேலும் தொலைபேசிகள் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட கண்டெய்னரையும் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக பொலிஸார் தெரிவிக்கையில்,
குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் 300 முதல் 400 மொபைல் போன்களை விற்றுள்ளதாகவும், IMEI எண்ணின் அடிப்படையில் தொலைபேசிகள் முடக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.