May 1, 2025 - 12:05 PM -
0
பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இன்று (01) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ். போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வரும், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தங்களுக்கான சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் போராட்டம் காரணமாக , வைத்தியசாலையின் பாதுகாப்பு மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு என்பன கேள்வுக்குள்ளாகியுள்ளது.
அத்துடன் , நோயாளர்களை பார்வையிட வருவோர் கட்டுப்பாடுகள் இன்றி வைத்தியசாலை விடுதிகளுக்கு செல்வதனால் , நோயாளிகளும் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதுடன், சிகிச்சை வழங்குவதிலும் நெருக்கடி நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
--