May 4, 2025 - 04:18 PM -
0
மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு, சாதனை படைக்கும் வகையில் 15 மணிநேர ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
இதன்படி, நாட்டுத் தலைவரொருவர் நடத்திய மிக நீண்ட ஊடகவியலாளர் சந்திப்புக்கான யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியின் சாதனையை மாலைத்தீவு ஜனாதிபதி முறியடித்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
நேற்று (3) உலக பத்திரிகை சுதந்திர தினத்துடன் இணைந்து மொஹமட் முய்ஸு இந்த ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அந்நாட்டு நேரப்படி நேற்று காலை 10.00 மணிக்குத் தொடங்கிய ஜனாதிபதியின் ஊடகவியலாளர் சந்திப்பு, நள்ளிரவு வரை 14 மணி நேரம் 54 நிமிடங்கள் நீடித்ததாக மாலைத்தீவு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி 2019 ஒக்டோபரில் 14 மணி நேர பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் முந்தைய 7 மணிநேர சாதனையை முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

