வடக்கு
யாழில் தேர்தலுக்கான பணிகள் நிறைவு

May 5, 2025 - 05:40 PM -

0

யாழில் தேர்தலுக்கான பணிகள் நிறைவு

நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான யாழ்ப்பாணம் மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டன. 

இன்று காலை 8.00 மணியளவில் வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லும் நடவடிக்கை தேர்தல் மத்திய நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களில் , 517 வாக்களிப்பு நிலையங்களுக்கு 672 வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05